menu

Wednesday 18 July 2012

வளர்பிறை, தேய்பிறை

 திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படுகின்ற விரிசலினால் சந்திரனில் விழும் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு அல்லது சந்திரனின் தோற்றத்தில் உண்டாகும் மாற்றங்களாகும். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

எண்   கிருஷ்ண பட்சம்    சுக்கில பட்சம்
 1          பிரதமை                      பிரதமை
 2         துவி்தியை                  துவி்தியை
 3          திருதியை                  திருதியை
 4         சதுர்த்தி                       சதுர்த்தி
 5         பஞ்சமி                        பஞ்சமி
 6         சஷ்டி                           சஷ்டி
 7         சப்தமி                         சப்தமி
  8        அஷ்டமி                    அஷ்டமி
  9        நவமி                          நவமி
10       தசமி                            தசமி
 11      ஏகாதசி                      ஏகாதசி
 12     துவாதசி                    துவாதசி
 13     திரயோதசி               திரயோதசி
 14     சதுர்த்தசி                  சதுர்த்தசி
15     அமாவாசை             பௌர்ணமி



      ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டுள்ளது.27 நக்ஷத்திரங்களும் இந்தபாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள்ளன.  ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம். அதுதான் முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.

ஆண்டுகள் 60

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய



தமிழ்மாதங்கள்
மாதங்களின் பெயர்கள்
சித்திரை - மேஷ மாசம்
வைகாசி - ரிஷப மாசம்
ஆனி - மிதுன மாசம
ஆடி - கடக மாசம்
ஆவணி - சிம்ம மாசம்
புரட்டாசி - கன்னி மாசம்
ஐப்பசி - துலா மாசம்
கார்த்திகை -விருச்சிக மாசம்
மார்கழி - தனுர் மாசம்
தை -மகர மாசம்
மாசி - கும்ப மாசம்
பங்குனி - மீன மாசம்

எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாசத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

அயனங்கள்

ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால்  நல்லது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற