menu

Thursday 25 June 2015

எல்லோருக்கும் சமமான யோகமே! அது எப்படி? ஜோதிட ஆராய்ச்சி

எல்லோருக்கும் சமமான யோகமே - ஜோதிட ஆராய்ச்சி

உயர்ந்தோர் தாழ்ந்தோர் உலகினில் இல்லை. அத்தனை பேரும் சமம்தான் - இதுதான் ஜோதிட விதி!

          ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு காரணத்துக்காக பிறந்துள்ளார்கள்.அவர்கள் எதுக்காக பிறந்துள்ளார்களோ அந்த நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய வகையில்தான் சிறப்பு அம்சங்களை பெற்று இருப்பார்கள். எல்லோருக்குமே ஒரு செம்பு நிறைய யோகம்தான் கொடுக்கப்ட்டுள்ளது. அது 12 கிளாசில்  ஒவ்வொன்றிலும் வெவ்வேறு உயரத்தில் அந்தந்த நபருக்கு ஏற்றவாறு ஊற்றப்ட்டுள்ளது. அவ்வளவுதான். எந்த கிளாசில் உயரமாக யோகம் ஊற்றப்ட்டுள்ளதோ அந்த வகையான சிறப்பு அம்சங்கள் அவரிடம் நிரம்ப இருக்கும் எந்த கிளாசில் மிகக் குறைவாக யோகம் ஊற்றப்பட்டுள்ளதோ அந்த அம்சங்கள் அவரிடம் குறைந்து காணப்படும். இந்த 12 கிளாசைதான் நாம் ஜாதக் கட்டம் என்கிறோம். பெரிய பணக்காரன் என்றால் அவரிடம் பணம்தான் பெரிதாக இருக்கும். அதற்குப்பதிலாக வேறு யோகங்களில் பெரிய பாதிப்புதான் இருக்கும். அதனால் இறைவன் படைப்பில் அனைவரும் சமமே. இது சம்பந்தமாக கீழே ஒரு சிறு கதை தந்திருக்கிறேன்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற